divine / ஆன்மீகம்
குர்ஆன் / Tamil Quran
Trending in Chennai, IN & 3 other cities this week
ஆன்மீக மற்றும் அறிவுப்பூர்வமான இரண்டு தளங்களிலும் உண்மையை மனிதன் கண்டடைய வேண்டியதன் முக்கியவத்துவத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து. மனித குலத்திற்கான நற்செய்தியைக் கொண்டுள்ள நூலாக குர்ஆன் விளங்குகிறது.
ஒவ்வொரு நூலுக்கும் ஒரு சுருப்பொருள் மற்றும் நோக்கம் இருக்கும். குர்ஆனின் கருப்பொருள் மற்றும் நோக்கம் இறைவனின் படைப்புத்திட்டத்தை மனிதனுக்கு எடுத்துரைப்பதாகும். அதாவது இவ்வுலகத்தை இறைவன் படைத்தது ஏன், பூமியில் மனிதனை குடியமர்த்தியதன் நோக்கம் என்ன, மரணத்திற்கு முன்உள்ள இந்த வாழ்க்கையில் மனிதன் என்ன செய்யவேண்டும். மரணத்திற்குப் பின்னரான நிரந்தர வாழ்க்கையில் என்ன நிகழும் என்பனவற்றைத் தெளிவுபடுத்துவதேயாகும்.
குர்ஆனின் முக்கிய நோக்கம், இறைவனைப்பற்றிய ஞானத்தை அடைதல், இறைவனின் நெருக்கத்தைப் பெறுதல், சாந்தி மற்றும் ஆன்மீக ரீதியிலான வாழ்க்கையை வாழ்தல் என்பதாகும். இறைமையைக் குறித்தும் இறைவன் உலகில் ஏற்படுத்தியுள்ள அத்தாட்சிகள் குறித்தும் ஆழ்ந்து சிந்தித்துணர்ந்து இவற்றை அடையலாம். இதனைக் குறிக்க தவஸ்ஸும், ததப்புர் மற்றும் தஃபக்குர் போன்ற சொற்களை குர்ஆன் பயன்படுத்துகிறது.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டே இந்த மொழிபெயர்ப்பும், விளக்க அடிக்குறிப்புகளும் செய்யப்பட்டுள்ளன.
This page shows ads. If a pop-up opens, close it and come back here to press the button again.
If a pop-up opens, close it and come back to this page.
This link was an ad. A separate audio download is not available for this book.
Discussion